• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு

December 2, 2021 தண்டோரா குழு

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோடு அருகே 2 யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த திப்ருகார் நகருக்குச் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது.

இதில் சில அடி தூரம் சென்று 2 யானைகளும் இழுத்துச் செல்லப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு யானை பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்தது. ஒரு யானையின் முறிந்த தந்ததை வனத்துறையினர் அகற்றி எடுத்தனர்.

இறந்த 2 யானைகளையும் புல்டோசர் இயந்திரம் மூலம் தண்டவாளம் அருகிலேயே குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் குழிக்குள் உப்பை தூவி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

அசாமில் சுமார் 5000 காட்டு யானைகள் வாழ்ந்து வரும் நிலையில், ஆனால் காட்டு யானைகள் அடிக்கடி ரயிலில் மோதி இறப்பது வாடிக்கையாக உள்ளது. நாடு முழுவதும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் மண்டலத்தில் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்க தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பமாக இருந்த யானை உள்பட 4 யானைகள் உயிரிழந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்ள அசாமில் 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க