• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் சார்பில் “ப்ராஜெக்ட் விண்வெளி” !

August 12, 2023 தண்டோரா குழு

ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் சார்பில் கோவை துடியலூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் “ப்ராஜெக்ட் விண்வெளி” குறித்த தொலைநோக்கி (telescope) செய்முறை பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது.

இதில், 6 முதல் 8 வரை பயிலும் மாணவ மாணவியர் தாங்கள் உருவாக்கிய தொலை நோக்கிகளை சோதனை செய்து பார்த்தனர்.

இது குறித்து ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் கிளப்பின் தலைவர் ரோட்டரியன் ரேஷ்மா ரமேஷ் கூறுகையில்,

எங்கள் கிளப்பின் சார்பில் 2022 துடியலூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் தொலைநோக்கி கருவிகள் கொடுத்தோம். இதை அடுத்த கட்டமாக எடுத்து செல்லும் விதமாக துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளை சேர்ந்த 24 அரசு பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து புராஜக்ட் விண்வெளி என்ற பெயரில் 2 நாட்கள் பயிற்சி பட்டறை
நடத்தினோம்.இதில் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.3.5.லட்சம் செலவில் தொலைநோக்கிகளை வாங்கி கொடுத்தோம்.ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் அமைப்பு மாணவர்களுக்கு தொலைநோக்கி கருவிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக வகுப்பு நடத்தினர்.

கனடாவில் ரோட்டரியன் வித்தியா நடராஜன் இதற்கான தொகையை வழங்க முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளை பலர் எங்கள் கிளப்பில் உறுப்பினராக உள்ளனர். இதனால், இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் உள்ள அரசு மாணவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம். அதற்கான முயற்சி செய்து வருகிறோம்.

இன்று நடைபெற்ற நிறைவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிராந்தி குமார் பாடி, ஆசிரியர் சித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் புனிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க