• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பண்ணை வீடுகள் மற்றும் வீடுகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்திய கோவை எஸ்.பி

January 25, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய வசிக்கும் பொதுமக்களுக்கு இன்று (24.01.2025) பண்ணை வீடுகள் மற்றும் வீடுகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன் கலந்து கொண்டார்.மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் அவர்களது கிராம பகுதிகளில் சந்தேகப்படும் படியான புதியவர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை வீடுகளில் பொருத்தும் படியும் எடுத்து கூறினார்.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் காவல் உதவி செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். அதாவது காவல் உதவி செயலி மூலம் பொதுமக்களுக்கு காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறியும் வசதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண்களை தெரிந்துகொள்ளும் வசதி, ஆன்லைன் பண மோசடி குறித்து புகார் தெரிவிக்கும் வசதி, மற்ற புகார்களை அளிக்கும் வசதி, அவசர கால எச்சரிக்கைகள், தகவல்களைபெறும் வசதி, வாகன விபரங்களை அறிந்துகொள்ளும் வசதி உள்ளன.

அதேபோல் காவல்துறைக்கு செலுத்த வேண்டிய அபராதங்களையும் இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் செலுத்தலாம். காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார், முதல் தகவல் அறிக்கை (FIR) விபரங்களையும் இச்செயலி மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் Kaaval Uthavi என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் இந்த செயலியை பதிவிறக்க செய்து பயன்படுத்தலாம் என காவல் உதவி செயலியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

மேலும் படிக்க