• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் 36 பேர் அனுமதி

August 14, 2019 தண்டோரா குழு

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் சத்திய மங்கலத்தைச்சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 11 பள்ளி மாணவர்கள் தொண்டை அடைப்பான் என்ற டிப்திரியா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தற்போது அப்பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து இதே நோய் அறிகுறியுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொண்டை அடைப்பான் நோய் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் மற்றும் ஈரோட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு டிப்திரியா டெட்டணஸ் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்திய மங்கலம் பகுதியில் இருந்து டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளி மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இந்த வைரஸ் தடுப்பூசி போட தமிழக அரசு முன்வர வேண்டும். தொண்டை அடைப்பான் நோய் குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க