• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புட்டுவிக்கி குளக்கரையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்ற மர்ம நபர்கள்

September 14, 2021 தண்டோரா குழு

கோவை புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள குளக்கரைகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்கடம் பெரியகுளம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன.இதுகுறித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று மருத்துவ கழிவுகளை அகற்றினர்.

இந்த நிலையில் செல்வபுரத்தை அடுத்து அமைந்துள்ள புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுள்ளனர்.பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் குளக்கரை அருகே கொட்டப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதனை சுத்தப்படுத்துவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க