• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் படர துவங்கிய ஆகாயத்தாமரை

July 21, 2021 தண்டோரா குழு

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக்கரையில் பூங்காக்கள், மிதிவண்டி பாதை, குளத்தில் மிதக்கும் நடைபாதை, படகு சவாரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் திறக்கப்பட்டது.இந்நிலையில், குளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை அதிகளவில் படர தொடங்கியுள்ளது.மிதக்கும் நடைபாதை, படகு சவாரி செய்வதற்கான கட்டமைப்பு ஆகியவற்றை ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது.

அவற்றை அகற்றாவிட்டால் நாளடைவில் அப்பகுதி முழுதும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததற்றதாக மாறிவிடும் எனக்கூறும் சூழலியல் ஆர்வலர்கள், குளங்களில் நேரடியாக கழிவுகள் கலப்பதாலே இதுபோன்று ஆகாயத்தாமரை படருவதாகவும், அதற்கு தீர்வுக்காணாமல் குளத்தில் உயிர் சூழல் பாதிக்கப்படும் வகையில் பொழுதுபோக்கு அமசங்களாக மாற்றுவது ஏற்புடையது இல்லை என்கின்றனர்.

ஏற்கனவே, மாநகராட்சி கீழ் உள்ள குளங்களில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் நொய்யல் புனரமைப்பு திட்டத்தால் குளங்களின் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படுவதுடன், குளங்களில் நீர் தேக்க பரப்பளவு குறைந்துள்ளதாகவும், அதனால் திட்டத்தை மாற்றியமைக்கவும் கோவையை சேர்ந்த 11 சூழலியல் அமைப்புகள் ஆதரங்கை முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க