• Download mobile app
20 Feb 2026, FridayEdition - 3663
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபல பத்திரிக்கையை எரித்து தபெதிக அமைப்பினர் போராட்டம்

August 1, 2020 தண்டோரா குழு

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை அவமரியாதையாக வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவு பழனி அறிவிப்பு என்று தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி பெயரை கொச்சைப்படுத்தி அவமரியாதையாக பழனி அறிவிப்பு என்று வெளியிட்டிருக்கிறது.தமிழக முதல்வர் பெயரை கொச்சைப்படுத்திய தினமலர் பத்திரிக்கை உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். என தமிழ்நாடு முழுவதும் தினமலர் பத்திரிக்கைகளை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் என அறிவித்திருந்தது.இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன்பு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தினமலர் பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க