• Download mobile app
27 May 2026, WednesdayEdition - 3759
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலையின் ஓரம் இருந்த மரம் விழுந்து பெண் பலி

May 21, 2020 தண்டோரா குழு

கோவையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த மரம் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் ராஜா மற்றும் காயத்ரி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குழந்தைகளுக்கு பொருள் வாங்குவதற்காக கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் ராஜா மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்களது வாகனம் லட்சுமி மில் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார். கணவர் ராஜா தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் தப்பினார். இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காயத்ரியை மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதில் காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க