• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது

December 7, 2021 தண்டோரா குழு

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் போலிசார் சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா வைத்திருந்தது உறுதியானது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் ஜிஸ்னு, சகாபுதீன் என்பதும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4.6 கிலோ கஞ்சாவும் 3 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க