• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோலாகலமாக துவங்கியது 3வது ஜல்லிக்கட்டு போட்டி !

February 23, 2020 தண்டோரா குழு

கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின. இந்நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாடுகளும் இப்போட்டியில் களமிறங்கின.

காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க