• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து 7 மாநிலங்களுக்கு 27,293 பேர் 21 சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைப்பு

May 21, 2020 தண்டோரா குழு

கோவையிலிந்து 7 மாநிலங்களுக்கு 27,293 பேர் 21 சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரொனா எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கோவையில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவளித்து வந்தது.

இதைதொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அமுல்படுத்தியது. இதனையடுத்து கோவையில் இருந்து கடந்த 7 ஆம் தேதி 1140 பயணிகளுடன் பீகாருக்கு முதல் சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்கப்பட்டது.இதை தொடர்ந்து பீகாருக்கு 10 ரயில்களும், உத்திர பிரதேசத்திற்கு 4 ரயில்களும், ஒரிசாவிற்கு 3 ரயில்களும்,ஜார்கண்ட்டுக்கு 2 ரயில்களும், அசாம் மற்றும் ராஜஸ்தானுக்கு தலா ஒரு ரயில்கள் என மொத்தம் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 27,293 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கோவையில் இருந்து இயக்கிய 21 சிறப்பு ரயில்களுக்கு சுமார் 2.25 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல மணிப்பூர் மற்றும் மேகாலயாவிற்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பேருந்து மூலம் 300 க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொகையையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க