• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் நாட்டின் முதல் திருநங்கைகளுக்கான பள்ளி தொடக்கம்

December 31, 2016 தண்டோரா குழு

திருநங்கைகளுக்கான இந்தியாவில் முதல் சர்வதேசப் பள்ளியைத் திருநங்கை ஆர்வலரும் கலைஞருமான கல்கி சுப்பிரமணியம் கொச்சியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3௦) திறந்து வைத்தார்.

தேசிய திறந்த பள்ளி அமைப்பின் கீழ் சஹாஜ் சர்வதேச பள்ளி 1௦ திருநங்கை மாணவர்களுடன் செயல்படும். பள்ளிக்கு செல்ல முடியாத அவர்களுக்கு இது மாற்று கல்வி நிலையமாக அமையும். இப்பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியும், அவர்களுக்கு மென்மையான திறன் பயிற்சி மற்றும் கரிம வேளாண்மை பயிற்சியும் கொடுக்கப்படும்.

இங்கு படிக்க வரும் மாணவர்கள் பல்வேறு திருநங்கை சமுகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். “ட்ரான்ஸ் இந்தியா பவுண்டேஷன்” அமைப்புடன் இணைந்து பணிபுரியும் ஆறு திருநங்கைகளின் கீழ் இந்த கல்வி நிறுவனம் செயல்ப்படும்.

இந்த சர்வதேசப் பள்ளியின் திறப்பு விழாவில், ட்ரான்ஸ் இந்தியா பவுண்டேஷன் அலுவலக நிர்வாகிகள் மாயா மோகன், விஜயராஜ் கலந்துகொண்டனர். கேரள சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி. தாமஸ் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் முஹம்மத் சபீறுல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க