• Download mobile app
19 Apr 2026, SundayEdition - 3721
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

December 31, 2016 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3௦) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவுக்கு அருகில் உள்ள தென்மேற்கு சும்பா மாவட்டத்தின் கிழக்கு நுசா டெங்காரா உள்ளது. அவ்விடத்தில் உள்ளூர் நேரத்தின்படி அதிகாலை 5.3௦ மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெங்காராவுக்கு தெற்கே 59 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் 91 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது 6.2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அங்கு உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க