• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதயம் கணிக்குமா?, கண்கள் பணிக்குமா? என தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்ப்பு.

March 24, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் மக்களின் தற்போதைய பேச்சே தி.ம.க குறித்துத்தான். அவர்களின் நிலை இந்தளவிற்கு மோசமாகப் போகும் எனத் தொண்டர்கள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்தளவிற்குக் கூட்டணிக்காக ஒரு சிலரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது மற்ற கட்சிகளை யோசிக்க வைத்தது.

இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் நம்முடைய சொந்த ஓட்டும் போய்விடும் எனக் கட்சிகள் கணக்குப் போட ஆரம்பித்தன. இந்நிலையில் இதுநாள் வரை எதிரும் புதிருமாக இருந்த கருணாநிதியும் அவரது மகன் அழகிரியும் இன்று நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர் கூறும்போது, செய்திகள் மூலமாகத்தான் எனக்கே தெரியும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது கலைஞரின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது வரை அழகிரியைப் பற்றி வாய்திறக்காத ஸ்டாலினும் அவர் தந்தையையும் தாயையும் பார்த்துப் போக வந்துள்ளார் எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதிலிருந்தே அவரைக் கட்சியில் மீண்டும் இணைக்கத் திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெரியவருகிறது. ஒவ்வொருமுறையும் யாரையாவது நீக்கிவிட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கும்போது கலைஞர் இதயம் கனத்தது, கண்கள் பணித்தது எனவே மீண்டும் தாய்வீடு திரும்பியுள்ளார் எனக் கூறுவது வழக்கம். அதே போன்ற வசனம் விரைவில் வரும் எனக் கட்சியினர் பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதே சமயம் அழகிரிக்காக தி.மு.கவை பகைத்துக் கொண்டவர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தி.மு.கவில் ஒரு வித பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் படிக்க