• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவையான பிரெட் அல்வா செய்வது எப்படி…?

October 25, 2018

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் – 10
சர்க்கரை – 2 கப்
முந்திரி – 20
பாதாம் – 10
உலர்ந்த திராட்சை – 10
நெய் – 1 கப்
பால் – 500 லிட்டர்
டால்டா – 2 டீஸ்பூன்

செய்முறை:

பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும்.மிகவும் பொடியாகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.பாலை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும்,இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் 11/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு 5 நிமிடம் கிளறி பிரெட் துண்டுகள் சேர்த்து வேக விடவும்.பிரெட் துண்டுகள் சற்று வெந்தவுடன் அதில் நெய் மற்றும் டால்டா சேர்த்து அதனுடன் வறுத்த முந்திரி,திராட்சை,துறுவிய பாதாம் சேர்த்து கிளறி விடவும்.சுவையான பிரெட் அல்வா தயார்.

மேலும் படிக்க