• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெஜிடேபிள் சக்கர சமோசா

June 13, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

அனைத்து பயன்பாடுகளுக்கும் உகந்த மாவு/மைதா – 2 கப்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் – 1 கப்

உப்பு – சுவைக்கேற்ப

கார்மின் விதைகள் – ½ டீ ஸ்பூன்

காய்கறியை கொண்டு நிரப்ப

உருளைகிழங்கு – 1 கப் (வேக வைக்கப்பட்டது மற்றும் நன்றாக பிசையப்பட்டது)

பச்சை பட்டாணி – ½ கப் (வேக வைக்கப்பட்டது)

கேரட் – ½ கப் (நறுக்கியது)

வெங்காயம் – பெரிது 1 (நன்றாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நன்றாக நறுக்கியது)

மஞ்சள் பவுடர் – 1 டீ ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன்

கொத்துமல்லி தழை – கை அளவு

எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

எப்படி தயாரிப்பது:

மாவு தயாரிப்பது எப்படி:

இந்த சமோசா செய்ய தேவையான மாவு என்பது உறுதியானதாகவும், கடினமானதாகவும் இருக்க வேண்டியதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிகம் தண்ணீர் தேவைப்படுமென்றால், பொறிக்கும் பொழுது மாவில் அதிக எண்ணெய் சேர்த்து ஊற வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் நமக்கு ஊறிய சமோசா (சோக்கி சமோசா) கிடைக்க, அது பார்க்க முடியாதபடியும் இருக்கும்.

ஒரு பெரிய பௌலை (கலப்பதற்கு) எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் மாவையும் சேர்த்து கொள்ளுங்கள்.

உப்பு ருசிக்கு ஏற்ற அளவினை சேர்த்து கொள்ள வேண்டும். அத்துடன் நெய்யையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

உங்கள் விரல்களை கொண்டு மாவையும் நெய்யையும் நன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். நமக்கு கிடைக்கும் ஒன்று நொறுங்கும் தன்மை உடையதாக இருக்க…மாவின் நிறமானது வெள்ளையிலிருந்து லேசான மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

அதன் பின்னர், வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீரை சேர்த்துவிடாமல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். அந்த மாவை, உங்கள் உள்ளங்கைகளை கொண்டு நன்றாக பிசைய வேண்டும்.

விரல்களை கொண்டு நாம் பிசைய, அந்த மாவு இழுவை நிலையில் இருக்காது. 6.அந்த மாவை ஈரமான மஸ்லின் துணி கொண்டு மூடி, ஓரமாக வைக்க வேண்டும்.

காய்கறி நிரப்புவது எப்படி

ஒரு கடாயை எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடான பின்பு, நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கி கசியும் வரை வதக்க வேண்டும்.

அவ்வாறு வதங்கிய பின்னர், அத்துடன் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்க வேண்டும். ஆம், இஞ்சி மற்றும் பூண்டின் மனம் வரும்வரை வதக்க வேண்டியது அவசியமாகும்.

அதன்பின். மசாலாவை சேர்க்க வேண்டும். ஆம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்க்க வேண்டும். அதன் நறுமணம் வரும்வரை மசாலாவை நன்றாக கிண்ட வேண்டும்.

இப்பொழுது பிசையப்பட்ட உருளைகிழங்கு, நறுக்கப்பட்ட கேரட், வேகவைக்கப்பட்ட பச்சை பட்டாணியை சேர்க்க வேண்டும்.தேவைக்கேற்ப உப்பினையும் சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக கடாயில் விட்டு கிண்ட வேண்டும்.அத்துடன் கொத்துமல்லி தழையையும் சேர்த்து கிண்ட வேண்டும்.இந்த காய்கறிகள் நிரம்பியதனை ஓரமாக குளிர்விக்க ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.

மேலும் படிக்க