• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முருங்கைக் கீரை கேழ்வரகு அடை

November 6, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 250 கிராம்
வெங்காயம் – 4 (பொடியாக)
பூண்டு – 10
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
முருங்கைக் கீரை – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை நசுக்கியது, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பின் சிறிதளவு நீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். வடைமாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை, மூடியின் பின்புறத்தில் ஒரு துணியை போட்டு அடை போல தட்டி, அதை தோசைக்கல்லில்போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். சத்தான முருங்கைக் கீரை கேழ்வரகு மாவு அடை தயார்.

குறிப்பு: இந்த அடையை காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும். சர்க்கரையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இதனை கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றிலும் இந்த அடையை தயாரிக்கலாம்.

மேலும் படிக்க