தேவையான பொருள்கள்:
– கோதுமை மாவு – 2 கப்
– காய்ச்சிய பால் – ½ கப்
– உப்பு – தேவையான அளவு
ஸ்டப் செய்ய:
– முட்டைகோஸ் துருவல் – ½ கப்
– வெங்காயத் துருவல் – ¼ கப்
– கேரட் துருவல் – ¼ கப்
– பசலைக் கீரை – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
– எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
– கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது
– கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
– உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காய துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்த பிசிறி வைத்து, 1௦ நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து எடுத்து அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணம் வைத்து மூடி சற்று கனமான சப்பாத்திகளாக உருட்டவும். தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தேய்த்த சப்பாதிக்களை சுட்டெடுக்கவும். சுவையான சத்தான முட்டைகோஸ் பசலைக் கீரை சப்பாத்தி தயார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்