• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதாம் பால் பூரி

June 13, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்

கோதுமை மாவு – 2 கப்

சர்க்கரை – 2 கப்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

பாதாம் – 10

மஞ்சள் நிற கேசரி பவுடர் – 1 சிட்டிகை

பாதாம் எசன்ஸ் – 4 துளிகள்

குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து,அதில் நெய்,1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து,15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைத்து,அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு,பின் அதனை மிக்ஸியில் போட்டு பால் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி,அதில் அந்த பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் நன்கு கொதிக்க விட்டு,அத்துடன் கேசரி பவுடர் மற்றும் எசன்ஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.இறுதியில் பாலானது வெதுவெதுப்பாக இருக்கும் போது,அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து,பின் பூரிகளை அதனுள் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால்,சுவையான பாதாம் பால் பூரி ரெடி!!!

மேலும் படிக்க