தேவையான பொருட்கள்:
சதைப்பற்றுள்ள மீன் – 5 துண்டுகள்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 8
பட்டை – ஒரு சிறிய துண்டு
அன்னாசிப் பூ – 1
ஏலக்காய் – 2
மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் – தேவையான அளவு
பிரியாணி இலை – 1
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும்வரை வதக்கவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு துணியில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப் பூ ஆகியவர்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும்போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். கடைசியாக வெக்காயத்தாள் மற்றும் சூப் இலையை (பிரியாணி இலை) சேர்க்கவும். சுவையான மீன் சூப் தயார். இதனை சாதத்துடனும் சாப்பிடலாம்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா