• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெய் முந்திரி புலாவ்

February 13, 2017 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

முந்திரி – கால் கப்.

நெய் – மூன்று தேகரண்டி.

சோம்பு – அரை டீஸ்பூன்.

பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது).

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்.

பட்டை – ஒன்று.

லவங்கம் – ஒன்று.

கஸ்துரி மேத்தி பவுடர் – கால் டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை.

தக்காளி – ஒன்று (நறுக்கியது).

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது).

கரம் மசாலா – கால் டீஸ்பூன்.

சாதம் – இரண்டு கப்.

செய்முறை

கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கஸ்துரி மேத்தி, உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.பின், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.வேகவைத்த சாதம் அதில் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க