• Download mobile app
16 Jan 2025, ThursdayEdition - 3263
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி-2 பட்டையக் கிளப்புது

April 27, 2017 tamilsamayam.com

பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்த ஒருவர், படம் சிறப்பாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உமர் சந்து என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் அந்த நபர், தன்னை பிரிட்டன் மற்றும் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என அழைத்துக் கொள்கிறார். இன்று அமெரிக்காவில் திரையிடப்பட்ட ”பாகுபலி- 2” படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்ததாக கூறியுள்ள அவர், அது குறித்து தனது வலைப்பக்கத்தில் சிறிய விமர்சனம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில் பாகுபலி 2 திரைப்படத்திற்கு அவர் 5 ஸ்டார் மதிப்பீடு அளித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் , லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் போன்ற ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததாகவும் உமர் தெரிவித்துள்ளார்.

பிரபாசின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்ததாகவும், ராணா மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். இன்று பாகுபலி-2 திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக உருவாகியுள்ளது மட்டுமின்றி, எதிர்காலத்தில் கிளாசிக் பட வரிசைகளில் பாகுபலி 2 திரைப்படம் இடம்பெறும் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் படிக்க