• Download mobile app
17 Jan 2025, FridayEdition - 3264
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னை கௌதம் மேனன் கைவிட்டதால் சூர்யா அதிர்ச்சி!

January 12, 2017 tamilsamayam.com

கௌதம் மேனன் தன்னை விடுத்து விக்ரமுடன் இணைவதால் நடிகர் சூர்யா அதிர்ச்சியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘காக்க காக்க’. இந்தப் படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இயக்குனர் கௌதம் மேனனுக்கு உண்டு. அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள். சூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்‘ படத்திலும் கௌதம் மேனன், சூர்யா கூட்டணி இன்னொரு வெற்றியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தன்னைப் பெரிய ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த சூர்யா, தன்னை மாற்றிய கௌதம் மேனனிடமே கதையை திருத்தச் சொல்லியிருக்கிறார். அதனால் கௌதம் மேனன், சூர்யாவை வைத்து எடுக்க ‘துருவ நட்சத்திரம்‘ படம் பூஜையுடன் நின்று போனது. மேலும் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் கூறுகையில் அதில் கௌதம் மேனனை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதனால் இந்த கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது. இருந்தாலும் சிலரது விடாமுயற்சியில் மீண்டும் ‘துருவ நட்சத்திரம்‘ படம் ஆரம்பமாகலாம் என்றார்கள். அவர்கள் சொன்னது போல் படம் ஆரம்பமாகிவிட்டது.

ஆனால், படத்திலிருந்து சூர்யாவை நீக்கிவிட்டு, நடிகர் விக்ரமை மாற்றினார் கௌதம் மேனன். வேறு யாரை வைத்து இந்தப் படத்தை எடுத்தாலும் சூர்யா கண்டிருக்கமாட்டார். சூர்யா போட்டியாக நினைக்கும் விக்ரமை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்திருப்பது சூர்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க