February 15, 2017
tamilsamyam.com
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத்தின் இயக்குனர் ஹரிக்கு சூர்யா கார் ஒன்றை பரிச்சளித்திருக்கிறார்.
இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் 3 வது பாகமாக உருவாகி வெளியான ‘சிங்கம் 3’ படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூலில் களைக்கட்டி வருகிறது. இபப்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஹரிக்கு ‘டோயடோ ஃபார்ச்சுனர்’ காரை பரிசாக வழங்கி சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படம் கடந்த பிப்.9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தற்போது வரை பாக்ஸ் ஆபீசில் சிங்கம் 3 திரைப்படம் ரூ.77 கோடி வசூல் செய்திருப்பதாகவும் விரைவில் ரூ.100 கோடியை தாண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.