• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிறந்த நாளில் சிவகார்த்திகேயனுக்கு ”வேலைக்காரன்” பரிசளிப்பு!!

February 17, 2017 tamilsamayam.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி நடிப்பில் தான் இயக்கி வரும் படத்திற்கு ”வேலைக்காரன் என்று இயக்குநர் மோகன் ராஜா பெயர் வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும், பிரபல இயக்குநருமான மோகன் ராஜா இயக்கிய ‘தனி ஒருவன்’ பலத்த வெற்றியை பெற்றது. இந்த வெற்றிப் படத்திற்குப் பின்னர் தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா,பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு தனி ஒருவன் 2ஆம் பாகம் என்று பெயர் வைப்பார் என்று கூறப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கான பெயரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று இந்தப் படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளார். இதை மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரெமோ படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டியோஸ் ராஜா தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ‘வேலைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் எனறும் அறிவித்துள்ளார். ரெமொவுக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் தற்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க