• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இச்சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன் – அதிதி பாலன்

January 11, 2018 தண்டோரா குழு

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘அருவி’.

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற இப்படம், ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுமட்டுமின்றி, முன்னணி திரையுலக நட்சத்திரங்களும் இப்படம் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஹீரோயினாக அறிமுக நாயகி அதிதி பாலன் நடித்திருந்தார். அவரது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அவரது நடிப்பை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் நாயகி அதிதி பாலன் இருவரையும் இயக்குநர் பாலா சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து அதிதி பாலா டுவீட் செய்துள்ளார். அதில்,என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க