• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாகார்ஜூனா மகன் அகில்-ஸ்ரேயா திருமணம் ரத்து?

February 22, 2017 tamilsamayam.com

நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயா இடையிலான திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவர் பிரபல நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, நாக சைதன்யா, அகில் என 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு, முன்னணி நடிகை சமந்தா உடன் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இளைய மகன் அகிலுக்கு, முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் திருணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களின் திருமணம் இத்தாலியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, திருமண அழைப்பிதழ் அச்சடித்து, விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என, அவசர தகவல் பகிரப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் நாகார்ஜூனா மற்றும் ஸ்ரேயா குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை, இருவரின் திருமணமும் ரத்து செய்யப்படுகிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க