• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நாச்சியார்’: சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதையா?

March 3, 2017 tamilsamayam.com

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வரும் ‘நாச்சியார்’ திரைப்படம் சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை இல்லை என படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

சென்னையில், கடந்த 1980-களில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி ஜெயப்பிரகாஷின் கதை தான் ‘நாச்சியார்’ என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறிய படக்குழு, ‘நாச்சியார்’ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜோதிகாவின் தைரியமான வாழ்க்கை பயணம் பற்றிய கதை. இதில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி. இப்படம் உண்மை சம்பவம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகா தைரியமான காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சிவகுமார், இயக்குனர் ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துக்க கொண்டனர்.

மேலும் படிக்க