• Download mobile app
22 May 2024, WednesdayEdition - 3024
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

August 28, 2018 தண்டோரா குழு

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி,நயன்தாரா,அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும்,மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் இப்படம் பெரும் சாதனை படைத்தது.இதுமட்டுமின்றி இப்படம் இயக்குநர் மோகன் ராஜாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இயக்குனர் மோகன்ராஜா இதற்கு நன்றி தெரிவித்தும்,தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.அது தனி ஒருவன் இரண்டாம் பாகம் தானாம்.அதிலும்,ஜெயம் ரவியே ஹீரோவாக நடிக்கவுள்ளார் என மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க