February 18, 2017
tamilsamayam.com
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் வெயில், ஜெயங்கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் தற்போது மலையாள படங்களில் தொடர்ந்து நடத்துவருகிறார். இவர் நேற்று கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இவரது வீடு இருக்கும் அன்காமலி பகுதியில் இருந்து காரில் வலுக்கட்டாயமாக பாவனா கடத்தப்பட்டுள்ளார். அங்கிருந்து ஆலுவா வழியாக கார் சென்று கொண்டிருக்கும் போது பாவனா தப்பியுள்ளார்.
பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.