• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடப்போகும் ஜெய்!

December 9, 2017 tamilsamayam.com

நடிகர் ஜெய் தற்போது நடிக்கவுள்ள புதிய படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ இம்மாத இறுதியில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஜெய் ‘எத்தன்’ பட இயக்குனர் சுரேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் பாம்புகளை அடிப்படையாக கொண்டு ‘நீயா’ பாணியில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகைகள் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரஸா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் மூவருமே பாம்பு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. முதல்முறையாக ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க