January 17, 2017
tamilsamayam.com
ஜல்லிக்கட்டு குறித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,” மிருகவதை என்றுகூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசியல் பிண்ணனி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்குகாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிவருவது பாராட்டதக்கது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கவேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் நாவலை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவைத்துள்ளேன். விரைவில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளேன்.
திரிஷா மீதான விமர்சன்ம் குறித்து அவரிடம் கேட்ட போது ,” அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்து உரிமை உள்ளது. அவ்வாறு யாரும் மாற்று கருத்தினை தெரிவிக்கும் போது கருத்தால் மட்டுமே ஏதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் முறையானது அல்ல.” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.