• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு திடீர் மாரடைப்பு: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

July 26, 2018 தண்டோரா குழு

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல இயக்குராக கருதப்படுவர் இயக்குநர் மணிரத்னம்.தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழி பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.தற்போது சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய்,ஜோதிகா உள்ளிட்டோரை வைத்து செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் ராவணன் படத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார். இதன்பின்னர்,கடந்த 2015ம் ஆண்டில் ஓகாதல்கண்மணி படத்தின் ரிலீசுக்கு பிறகு நெஞ்சுவலி ஏற்பட்ட போது டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார்.தற்போது 3-வது முறையாக அவர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும்,வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க