April 17, 2017
tamilsamayam.com
‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரை முன்னணி கதாப்பாத்திரமாக வைத்து இயக்க விரும்பியதாக பிரபல மலையாள நடிகரான மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அப்படத்தை இயக்க முடியவில்லை என மம்மூட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லோஹித்தாஸ் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘பூதக்கண்ணாடி’ திரைப்படத்தில் மம்மூட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக இயக்குனர் லோஹித்தாஸ், தேசிய விருது விழாவில் சிறந்த அறிமுக இயக்குனர் எனும் பிரிவில் ‘இந்திரா காந்தி விருது’ பெற்றார். மம்மூட்டி சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார்.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து ‘தளபதி’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படம் இதிகாச நூலான மகாபாரதத்தில் இடம்பெற்ற கர்ணன், துரியோதனன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.