• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதியில்லை என்றால் தேசிய விருதை எடுத்துக் கொள்ளுங்கள்

April 25, 2017 tamilsamayam.com

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், 25 ஆண்டுகாலம் தனது திரையுலக வாழ்வில், தேசிய விருதுக்கு தான் தாகுயானவனல்ல என்று கருதினால் எனது தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

‘ரஸ்டம்’ திரைப்படத்தில் இந்திய கடற்படை வீரராக நடித்திருந்த அக்ஷய் குமார், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான அக்ஷய்குமார் இது குறித்து கூறுகையில்,’நான் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் தேசிய விருது அறிவிக்கப்படும்போது, அதற்கு தகுதியானவர்கள் யார் என்ற விவாதம் எழுகின்றது. எனக்கு 25 ஆண்டுகள் கழித்து தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என்று கருதினால், எனது தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

அக்ஷய்குமார் நடித்த ‘கில்லாடி’, ‘மொஹ்ரா’ போன்ற ஆக்ஷன் படங்களை தாண்டி, தற்போது தேசியப்பற்றுள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘ரஸ்டம்’ மட்டுமல்லாது, ‘ஹாலிடே:எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி’, ‘பேபி’, ‘ஏர்லிஃப்ட்’ போன்ற படங்கள் தேசியம் பேசும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க