• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாரிப்பாளரான அஞ்சாதே நடிகர் நரேன்

November 13, 2018 தண்டோரா குழு

கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன்,தற்போது கண் இமைக்கும் நேரத்தில் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.நள்ளிரவு 1 மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் திரில்லராக எடுக்கப்பட்டு வரும் இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.புதுமுகங்கள் பலரும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார்.இதன் மூலம் அவர் முதன் முறையாக தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க