• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிஸ் அடிக்க நான் ரெடி! நீங்க ரெடியா? கேள்வி கேட்ட ராகுல் பிரீத் சிங்

June 2, 2017 tamilsamayam.com

தன்னுடன் நடிக்கும் ஹீரோவுடன் முத்தக்காட்சியில் இணைந்து நடிக்க நான் ரெடி என்று கிளாமர் நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ஸ்பைடர் மற்றும் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களில் ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். மேலும், சிம்லா மிர்சி என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், படங்களில் தான் கவர்ச்சியாக நடித்து வருவது பற்றி ராகுல் பிரீத் சிங் கூறுகையில்,

நடிகைகளை கவர்ச்சியாகவே பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் தான் நான் கவர்ச்சியாக அதிக கிளாமரில் நடிக்கிறேன். அதே நேரத்தில் படத்தில் என்னுடைய ரோலுக்கும், கதைக்கும் கிளாமர் தேவைப்படாத பொழுது நான் ஒருபோதும் கிளாமரில் நடிப்பதில்லை. இயக்குனர்கள் கிளாமரை கண்டாயமாக்கினால் நான் ஒத்துக்கொள்வதில்லை.

அதே போலத்தான் முத்தக்காட்சியிலும் அவசியம் என்றபோது மட்டுமே நான் நடிக்கிறேன். பெரும்பாலும், நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் நான் ஒவ்வொரு கதையையும் கேட்டு நடித்து வருகிறேன். எந்த பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எனக்கான ரோல் பிடித்தால் மட்டும் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். ஒரு படத்திற்கு நான் கால்ஷீட் கொடுத்து விட்டால், எக்காரணம் கொண்டும், அந்த கால்ஷீட் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க