• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடிவேலுக்கு வருது நடிக்க தடை? – பட அதிபர்கள் சங்கம் இறுதி கெடு

May 26, 2018 tmailsamayam.com

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை வரக்கூடும் என கூறப்படுகிறது.

2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் வெளி வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க அதன் தயாரிப்பாளர்,முன்வந்தார்.

அந்த படத்தை இயக்கிய சிம்பு தேவன் இயக்க முடிவு செய்யப்பட்டு,வடிவேலுவுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் முன்பணமாக கொடுத்து நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.இப்படத்திற்கு பல கோடி செலவில் அரங்குகள் அமைத்து படபடப்பிடிப்பு தொடங்கியது.சில நாட்கள் மட்டும் நடந்த இந்த படப்பிடிப்புக்கு பின்,வடிவேலு சம்பள பிரச்னை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

படப்பிடிப்பு நின்றதால் அரங்குகள் பிரித்து விட்டனர்.இதனால் பல கோடி செலவு செய்தது வீணானதாகவும்,வடிவேலு தொடர்ந்து நடிக்க வலியுறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திடம் ஷங்கர் முறையிட்டார். இதற்கு விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால்,அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என வடிவேலு பிடிவாதமாக மறுத்துவிட்டார்.இதுகுறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டதில் படத்துக்கு செலவழித்த 9 கோடியை வடிவேலு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என மற்றொரு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” படத்தில் தொடர்ந்து நடிக்க சம்மதிக்க வடிவேலுக்கு ஒரு வார கால கெடு விதிக்கப்பட்டுள்ளது. வடிவேலு மறுக்கும் பட்சத்தில்,அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க