• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்கள் செய்த வினையால் விஜய் மீது வழக்கு

May 11, 2017 தண்டோரா குழு

விஜய் செய்த வினையால் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி விஜய் மீது சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் விஜயின் புதிய படத்தின் போஸ்டர் என்று ஒரு புகைப்படத்தை சேர் செய்து வருகின்றனர். அதில், ஷூ அணிந்த விஜய் திரிசூலத்தை கையில் வைத்து நடனமாடுவது போல் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், இந்த புகைப்படம் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் செய்த ஆர்வக்கோளாறால் விஜய்க்கு பெரிய அவமானம் நேர்ந்துள்ளது.

மேலும் படிக்க