• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யாருக்குமே தெரியாமல் ஐந்தாயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்த ரியல் ஹீரோ.!

October 30, 2017 tamil.samayam.com

நடிகர் அஜித் இதுவரையிலும் குறைந்தது ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பண உதவி செய்துள்ளதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நாயகனாக திகழ்பவர் நடிகர் அஜித். நடிப்பை விட இவரது குணத்துக்கே பல ரசிகர்கள் இவருக்கு உண்டு. இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ள ராதாரவி, அவர்தான் நிஜ ஹீரோ என்று புகழ்ந்து பாரட்டியுள்ளார்.

விளம்பரத்திற்காக சேவை செய்யும் நடிகர்களின் மத்தியில் நடிகர் அஜித் தேடிச் சென்று உதவுவதால் தான், மக்கள் அவரை அஜித் சார் என்று அழைப்பதாக கூறிய ராதாரவி, நடிகர் அஜித் இதுவரை யாருக்கும் தெரியாமலேயே ஐந்தாயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை உதவி செய்துள்ளதாக கூறினார்.

எனவே நிஜ வாழ்க்கையிலும் உண்மையான ரியல் ஹீரோ என்றால் அது அஜித்தாக மட்டுமே இருக்க முடியும் என்று பாரட்டியுள்ளார்.

மேலும் படிக்க