• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் படக்குழுவினருக்கு 200 தங்க நாணயம் பரிசளித்த தளபதி விஜய்!

August 2, 2017 tamilsamayam.com

மெர்சல் படக்குழுவினருக்கு 200 தங்க நாணயம் பரிசளித்துள்ளார் தளபதி விஜய்.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர் அட்லியுடன் இணைந்து மெர்சல் படத்தில் தளபதி விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சத்யராஜ் ஆகியோர் பலர் நடித்து வருகிறனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படயிருக்கிறது.

இதற்கிடையில் வரும் 20ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியாகவுள்ளது. அதோடு, இப்படத்தின் டீசரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே, மெர்சல் படக்குழுவினர் 200 பேருக்கு 200 தங்க நாணயங்களை தங்கதளபதி விஜய் பரிசாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக பைரவா குழுவினருக்கு தங்க ஜெயின், பிரேஸ்லெட் போன்றவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க