• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்று ஆண்டுகளுக்கு பின் ரீ- என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா

November 6, 2017 தண்டோரா குழு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நஸ்ரியா. நிவின் பாலியின் ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘ராஜா ராணி’, தனுஷின் ‘நய்யாண்டி’, துல்கர் சல்மானின் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக நஸ்ரியா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. அதன்பின் 2014-ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இதனால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் நஸ்ரியா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இதனிடையே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நஸ்ரியா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கவிருக்கும் புதிய மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் பிருத்விராஜ் மற்றும் பார்வதியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க