• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்தாஜை அழ வைத்த சென்றாயன் துரத்திய மஹத்

June 21, 2018 தண்டோரா குழு

மும்தாஜை அழவைத்ததால், ‘நீ வெளில போடா’ என்று சென்றாயனை மஹத் விரட்டிய சம்பவம் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் நடந்துள்ளது.

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 கடந்த ஞாயிறன்று துவங்கியது.நிகழ்ச்சி துவங்கிய 3 நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வரத்துவங்கிவிட்டது.

இந்நிலையில், இன்று புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியானது.அதில்,மும்தாஜ் மற்றும் சென்றாயன் இருவரும் நடனம் ஆடினர்.அப்போது ‘அய்யோ… நான் மும்தாஜ் கூட ஆடிட்டேன்பா’ என சந்தோஷமாகக் கத்தினார் சென்றாயன்.

அப்போது,திடீரென மும்தாஜ் அழ ஆரம்பித்தார்.அங்கிருந்த ஷாரிக் ஹாசன்,ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்கள் அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.இதற்கிடையில், மும்தாஜ் அழுவதைப் பார்த்துக் கடுப்பான மஹத், ‘டேய்… ஏன்டா இப்படிப் பண்ற? நீ வெளில போடா… போடா வெளில’ என்று சென்றாயனைப் பார்த்து திட்டினார் எதுவும் புரியாமல் அதிர்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார் சென்றாயன்.அங்கு என்ன நடந்தது? ஏன் மும்தாஜ் அழுதார்? என்பது இன்றைய ‘பிக் பாஸ் 2’வில் தெரியவரும்.

மேலும் படிக்க