• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வன் 2 விற்கு கதை எழுதுகிறார் பாகுபலி கதாசிரியர்

May 16, 2017 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் 1999-ல் வெளியான படம் முதல்வன். இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம், இந்தியில் “நாயக்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2001ல் வெளியான இப்படத்தையும் ஷங்கரே இயக்கினார். அர்ஜுன் நடித்த வேடத்தில் அனில் கபூரும் மனிஷா வேடத்தில் ராணி முகர்ஜியும் நடித்திருந்தனர். ஆனால், இந்தியில் இப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும் “பாகுபலி” கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கு கதை எழுதுகிறார். ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.ஆனால், இது தமிழில் உருவாகுமா? ஷங்கரே இதை இயக்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

மேலும் படிக்க