• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வன் 2 விற்கு கதை எழுதுகிறார் பாகுபலி கதாசிரியர்

May 16, 2017 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் 1999-ல் வெளியான படம் முதல்வன். இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம், இந்தியில் “நாயக்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2001ல் வெளியான இப்படத்தையும் ஷங்கரே இயக்கினார். அர்ஜுன் நடித்த வேடத்தில் அனில் கபூரும் மனிஷா வேடத்தில் ராணி முகர்ஜியும் நடித்திருந்தனர். ஆனால், இந்தியில் இப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும் “பாகுபலி” கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கு கதை எழுதுகிறார். ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.ஆனால், இது தமிழில் உருவாகுமா? ஷங்கரே இதை இயக்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

மேலும் படிக்க