• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகிறதா சிங்கம் 4 ?

April 5, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலன்று  வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நடிகர் சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் ஏற்கெனவே, ‘வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3’ ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார். இதனால் இப்படம் சிங்கம் 4 தானா என்றும் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘சிங்கம்’ பாகங்களின் தொடர்ச்சி இல்லையாம். இது முற்றிலும் வேறு ஒரு கதையாம். இதை ஹரியே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க