• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் தமிழ்பட இயக்குநர் குறித்து ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு

July 16, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இதற்கிடையில்,ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகரும்,இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்,

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது.அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அவர் என்னை சுந்தர்.சி யிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன்.அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர்.அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்… கணேஷ் ஒரு பிராடு,அவர் எனக்கு உதவி செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க