• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாரி-2 40 சதவீத படப்பிடிப்பு நிறைவு

March 16, 2018 தண்டோரா குழு

மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் ‘மாரி–2’  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இயக்குனர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இன்று முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் போராட்டம் முடிந்த பிறகு ‘மாரி-2’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். தற்போது வரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. மேலும் படத்தை இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க