• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு – ரஜினியின் பாராட்டை பெற்ற கார்த்திக் நரேன்

September 14, 2019 தண்டோரா குழு

மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அருண்விஜய் ‘மாஃபியா’ படத்தில் நடித்துள்ளார். `துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிள் கவனத்தை ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார்.டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க