• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நடிகை ஓவியா..!

August 5, 2017 தண்டோரா குழு

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் நடிகை ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில்,ஓவியா காதல் தோல்வியால் தற்கொலை செய்ய முயற்சித்தார், அவரை பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து காப்பாற்றி விட்டனர். இவர் தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? இல்லையா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இதற்கிற்கிடையில்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான், மீண்டும் வீட்டிற்குள் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் ஜூலி, வையாபுரி, ஓவியாஆகியோர் இருப்பதாலும், அவர்களில் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது கமல் முன்னிலையில் இன்று ஷூட் செய்யப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஓவியா குறித்து பல்வேறு வதந்திகள் வந்ததுள்ளதால் அதனை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி கமல் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

ஓவியா வெளியேற்றப்படுகிறாரோ, அல்லது அவராகவே வெளியேறுகிறாரோ என்பது ஒருபுறம் இருக்க இன்று நடைபெறும் ஷூட்டில் பங்கேற்பது அவசியம் என்பதால் நிகழ்ச்சி நிர்வாகிகள் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஓவியாவும் சம்மதிக்க தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க