• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்ற கவிஞர் சினேகன்

July 17, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் மமதி,அனந்த் வைத்தியநாதன்,நித்யா என 3 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர்.அதைபோல்,இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் பாலாஜி,ஐஸ்வர்யா,ரம்யா,பொன்னம்பலம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட போலீஸ் – திருடன் டாஸ்க் போன்று இந்த முறை பள்ளி சிறுவர்கள் போல் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தின் புரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிக்குள் வந்தார்.

இந்நிலையில் ஆசிரியராக பிக்பாஸ் வீட்டிற்குள் கவிஞர் சினேகன் வருகை தந்துள்ளார்.இதற்கான புரமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதில் பேசியிருக்கும் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் உண்மையான முகத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

மேலும் வீட்டிலிருப்பவர்களிடையே பேசிய சினேகன்,வீட்டில் உங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சாப்பிடும் போதாவது ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.மற்றொரு புரோமோவில்,சினேகன் பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்து நீங்கள் யாரும் நீங்களா இல்லை எனக் கூறுகிறார்.இதற்கு ரம்யா,வைஷ்ணவி ஆகியோர் கோபமாக ஏதோ சொல்கிறார்கள்.அப்படி என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

மேலும் படிக்க